robberry
சென்னை அருகேயுள்ள மகாபலிபுரம் அருகேயுள்ள மாசாஜ் சென்டரில் வாலிபர் சிலர் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youngster robbery in old mahabalipuram road – பழைய மகாபலிபுரம் சாலை ஏகட்டூர் எனும் பகுதியில் சன் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் செயல்பட்டு வருகிறது. கடந்த 28ம் தேதி அன்று அங்கு திடீரென 2 வாலிபர்கள் உள்ளே புகுந்தனர். அதில், ஒருவன் மட்டும் பட்டாக்கத்தி வைத்திருந்தான். உள்ள ஒரு ஆண், இரு பெண்கள் மற்றும் ஒரு மூதாட்டி இருந்தனர். அதன்பின் ஒருவர் பின் ஒருவராக 3 வாலிபர்கள் உள்ளே வந்தனர். அவர்களை தாக்கி பணம், செல்போன், நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர். அதன்பின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் அதிக நேரம் இருப்பவரா நீங்கள் ? உங்கள் விரல்கள் பத்திரம்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அவர்களின் உருவம் தெளிவாக பதிவாகியுள்ளது. எனவே, இதில், விஜய் பிரபாகரன், அஜய், சசிகுமார், ஜெகதீசன் ஆகிய 4 பேரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இதில், வினோத் மட்டும் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும் பணியில் கேளம்பாக்கம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பட்டப்பகலில் கத்தியை காட்டி வாலிபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மகாபலிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.