college girl
காதலனால் கர்ப்பமடைந்த பெண் கருவைக்கலைக்கும் முயற்சியில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Young girl died in attempt of abortion in karnataka – கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருபவர் ராணி(23). இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் தனியாக பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இதில் ராணி கர்ப்பமடைந்தார். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்தால் சிக்கல் ஆகிவிடும் என கருதிய ராணி கர்ப்பத்தை கலைக்க திட்டமிட்டார். எனவே, காதலனை அழைத்துக்கொண்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

திட்டிய பெற்றோர்கள், பொங்கிய லாஸ்லியா ஆர்மி – திருந்துவாரா லாஸ்லியாவின் அம்மா .!

ஆனால், தவறான சிகிச்சையின் காரணமாக கருக்கலைப்பின் போது ராணி உயிரிழந்தார். இந்த விவகாரம் போலீசாருக்கு தெரிந்தால் சிறைக்கு செல்ல நேரிடும் எனக்கருதிய காதலன் அவரது உடலை ஒரிடத்தில் வைத்து எரித்துவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதற்கிடையில் தங்கள் மகளை காணவில்லை என ராணியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பின் ராணியின் உடலை கண்டு அது தங்கள் மகள்தான் என அடையாளம் காட்டினார். எனவே, ராணியின் காதலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அந்த ராணிக்கு தவறான சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையின் மருத்துவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.