நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் உருவ கேள்வி குறித்து வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கோலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர்தான் யோகி பாபு. தனது காமெடி மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி இருக்கும் இவர் வெறும் காமெடியனாக மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் கலக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவில் முத்திரையை பதித்த இவர் தற்போது பான் இந்தியா திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் பாலிவுடில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை தொடர்ந்து பல படங்களை கை வசம் வைத்திருக்கும் யோகி பாபு திடீரென்று தனது ட்விட்டர் பக்கத்தில் உருவகேலி குறித்து மீம் மூலம் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த மீம்ஸ் ரசிகர்கள் பலரை சிந்திக்க வைத்துள்ளது.

அதில் அவர், “வெள்ளையா ஒல்லியா இருந்தா அழகுன்னு சொல்றாங்க, என்ன மாதிரி குண்டா இருந்தா கலாய்க்கிறாங்க, உருவகேலி செய்றாங்க. எங்களோட கஷ்டமும் வலியும் யாருக்குமே புரியாது” என்று பதிவிட்டிருக்கிறார். இப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.