போதையில் விபத்தில் சிக்கியும் நீ திருந்தலையா என ரசிகர்கள் யாஷிகாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Yashika in Latest Photoshoot : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேலும் பிரபலமான யாஷிகா பல்வேறு படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த வருடம் தன்னுடைய நண்பர்களுடன் மகாபலிபுரம் சென்று வீடு திரும்பியபோது கார் விபத்தில் சிக்கி பலியானார். போதையில் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக கூட சொல்லப்பட்டு வந்தது.

ஒரு Show பண்ணியே பெரிய ஆல் ஆகிடுறாங்க! – Ashwin-யை கலாய்த்த பிரபலம் | #PenVilaiVerum999RubaiMattume

இந்த விபத்தால் இரண்டு கால்களும் சேதமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்துள்ள யாஷிகா ஆனந்த் தற்போது கையில் சரக்கு கிளாஸ் உடன் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இன்னும் நீங்க திருந்தலையா என யாஷிகாவை திட்டி வருகின்றனர்.