என்னை யாரும் வாழ்த்தாதீங்க என நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Yashika Anand in Instagram Post After Accident : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
நினைத்தது நிறைவேற, பெண்களின் வழிபாடு.!
அதன் பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். இவர் சமீபத்தில் மகாபலிபுரம் அருகே கார் விபத்தில் சிக்கினார். யாஷிகா ஆனந்த் அதிவேகமாக கார் ஓட்டியதில் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டதும் அவருடைய தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் உட்பட அவருடைய இரண்டு நண்பர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் என்னுடைய பிறந்தநாளுக்கு யாரும் எனக்கு வாழ்த்து சொல்லாதீர்கள். பவானியின் மரணத்தால் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வுடனேயே இருப்பேன். பவானி என்னை மன்னிக்க மாட்டாள். அவருடைய குடும்ப நிச்சயம் ஒரு நாள் என்னை மன்னிக்கும் என கூறியுள்ளார்.
Sunny Leon உடன் இணையும் Cooku With Comali பிரபலம் – Tamil Cinema-வில் பரபரப்பு..!