நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது படங்களில் நடிப்பதுடன் அரசியலிலும் வரப்போவதாக தெரிவித்து உள்ளார்.
Yashika Anand Enters Political : யாஷிகா ஆனந்த் “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் மூலம் வெளியில் தெரிய தொடங்கினார்.
அந்த நேரத்தில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக சென்ற பிறகு யாஷிகாவை பற்றிய மக்களின் கருத்து மாறி ரசிகர்கள் அதிகரித்தனர்.
தோனியின் சாதனையை முறியடித்து ரிஷப் பந்த் சாதனை !
பிக் பாஸ் நிகழ்ச்சியை குடுபங்களும் பார்ப்பதால், அனைவர்க்கும் யாஷிகாவை தெரிய தொடங்கியது. இவர் தற்போது “ஜாம்பி” என்ற படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதில் சண்டை காட்சிகளில் இவரே நடித்து உள்ளார்.
அதனை தொடர்ந்து யோகி நடிப்பில் “ஜாம்பி” உருவாகி முடிந்த நிலையில் அந்த பட டீசர் வெளியீட்டு விழாவில், பட குழு கலந்து கொண்டது.
அதில் யாஷிக்கவிடம் பத்திரிக்கை நிபுணர்கள் பேட்டி எடுக்கும் போது யாஷிகா கூறிய பதில்:
” இந்த படத்தை நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு நடித்த படம் இதுதான். இதில் நான் நான்கு மாதங்கள் கடும் உழைப்பை போட்டு உள்ளேன், மற்றும் சண்டை காட்சிகளில் நடித்து உள்ளேன்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். மேலும் நான் கோவை சென்ற போது அங்கு எனது ரசிகர்கள் எனது பிறந்தநாள் அன்று மக்களுக்கு நலஉதவிகள் செய்தர்கள் என்று கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது” என்று கூறினார்.
பிறகு, அரசியலில் வரும் எண்ணம் இருக்கா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
“நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன், அரசியல் மூலம் மக்களுக்கு நல்லது செய்வேன் என்றும், எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் அதை யாரும் தடுக்கக்க முடியாது என்றும்” கூறினார்.