திருமணம் எப்போது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
Yashika Anand About Marriage : தமிழ் சினிமாவில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த. இந்த படத்தை தொடர்ந்து உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
மேலும் இவர் கடந்த வருடம் கார் விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று தற்போது உடல் நலம் தேறி என்று பிஸியாக தொடங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனக்கு லவ் எல்லாம் செட்டாகாது, திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாகவும் இது அரேஞ்ச் மேரேஜ் எனவும் பதிவு செய்திருந்தார்.
ஆனால் மாப்பிள்ளை யார்? எப்போது திருமணம் என்பது குறித்த தகவல்களை அவர் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் இன்று தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவரையும் ஏப்ரல் ஃபூல் செய்து விட்டதாக கூறியுள்ளார். திருமணம் பற்றி திட்டமிட இன்னும் 10 வருடங்கள் ஆகும் என யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார்.