யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களும் அவருக்கு திருமணமாகி விட்டது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Yashika Anand About Her Marriage : தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் முதல் போட்டியாளராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாகவும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் யாஷிகா. அதன்பன்னர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
டிரடிஷனல், ஹாட் என இரண்டு விதமாகவும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தன்னுடைய நெற்றியில் குங்குமத்தை வைத்து புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அனைவரும் எனது யாஷிகாவிற்கு கல்யாணம் முடிந்ததா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்து அவர் கூறிய விளக்கத்தில் எனக்கு திருமணம் எல்லாம் ஆகவில்லை போட்டோ ஷூட்டிற்காக தான் குங்குமம் வைத்து இருந்தேன் என கூறியுள்ளார்.