தி நகர் பாண்டிபஜார் பிளாட்பார்மில் உட்கார்ந்து வீடியோ வெளியிட்டு உள்ளார் இயக்குனர் எஸ் ஏ சி.
Yaar Indha SAC Episode 1 : தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் ஆலமரமாக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர். எக்கச்சக்கமான திரைப்படங்களை இயக்கிய இவர்தான் தளபதி விஜயின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருந்தவர்.

இவர் தற்போது யார் இந்த எஸ்எஸ்சி என்ற பெயரில் யூடியூபில் புதிய சேனலை தொடங்கியுள்ளார். இதன் மூலமாக இன்று முதல் தன்னுடைய சுயசரிதையை வீடியோவாக வெளியிட உள்ளார்.
இந்த சேனலில் முதல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் திநகரில் உள்ள பாண்டி பஜார் பிளாட்பார்மில் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் என்னுடைய சுய சரிதையை சொல்வதாக கூறி இருந்தேன் அதனால்தான் என்னுடைய திரைப் பயணத்தை தொடங்கிய இடத்தில் அமர்ந்து இந்த வீடியோவை பதிவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு வீட்டை விட்டு ஓடி வந்த நான் இந்த பிளாட்பார்மில் தங்கி தான் வாய்ப்புகளை தேட ஆரம்பித்தேன் என எஸ்ஏசி கூறியுள்ளார். SAC வெளியிட்டுள்ள முழு வீடியோ இதோ