Actress Suicide : X வீடியோஸ் படத்தில் நடித்திருந்த நடிகை ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ் ஆகிய படங்களில் நடித்திருந்தனர் இளம் நடிகையான ரியாமிகா.
சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்லூரி படிப்பை முடித்து விட்டு படங்களில் நடிக்க முயற்சி செய்துள்ளார்.
மேலே குறிப்பிட்டு இருந்த இரண்டு படங்களை தவிர பெரியதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ரியாமிகாவின் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். மன உளைச்சல்களால் இளம் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
ரியாமிகாவின் தற்கொலை மரணம் அவரது குடும்பத்திலும் திரையுலகிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சென்னை வளசரவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.