உலக மல்யுத்த போட்டி புடாபெஸ்ட்டில் நடக்கின்றது. இதில் 65 கிகி எடை பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் தலைமையில் இந்திய அணி கலந்துக் கொண்டது .
பஜ்ரங் முன்னதாக நடந்த காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகளில் மல்யுத்த பிரிவில் இந்தியாவிற்காக தங்கம் வென்று கொடுத்துள்ளார்.
இப்பொழுது அவர் உலக மல்யுத்த போட்டியில் இந்தியா சார்பில் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இவர் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
இவர் காலிறுதியில் மங்கோலியாவின் வீரர் தில்காவை எதிர்க் கொண்டு 5-3 என்ற கணக்கில் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.
இவர் அரை இறுதியில் கியூபா வீரர் அலெஜெண்ட்ரோவை எதிர்கொள்கின்றார். இப்போட்டியில் இவர் தங்கம் வெல்லுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.