World Level Boxing : பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
இதில் 57 கிலோ பிரிவில் நேற்று நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சோனியா லாத்தெர், மொராக்கோ வீராங்கனை டோஜனி டோயாவை எதிர்கொண்டார்.
இதில் சோனியா 5-0 என்ற கணக்கில் டோஜானியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இவர் ஆசிய போட்டிகளில் 2 முறை வெள்ளி பதக்கம் மற்றும் 2016-ல் உலக போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடதக்கது.
மேலும் 51 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 4-1 என்ற கணக்கில் அர்மேனியா வீராங்கனை அனுஷ் கிரிகோர்யானை சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார்.
அதோடு நடந்த 64 கிலோ பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 4-1 என்ற கணக்கில் அமெரிக்காவின் அமெலி மூரை தோற்கடித்து அடுத்து சுற்றுக்கு நுழைந்து உள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.