World Cup Shootings
World Cup Shootings

World Cup Shootings – இந்தியா தற்போது உள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக உள்ளது. அதனை நிருபிக்கும் வகையில் விளையாட்டு துறையல் தனி முத்திரை பத்தித்து வருகிறது.

இந்நிலையில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனைகள் மானு பாகெர், ஹீனா சித்து ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியாமல் ஏமாற்றம் கொடுத்தனர் .

மானு பாகெர் 573 புள்ளிகளுடன் 14-வது இடத்துக்கும், ஹீனா சித்து 571 புள்ளிகளுடன் 25-வது இடத்துக்கும் தள்ளப்பட்டு தகுதி சுற்றுடன் வெளியேறினர்.

8 பேர் அடங்கிய இறுதி சுற்றில் வீராங்கனை 21 வயதான வெரோனிகா மாஜோர் 245.1 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

அவருக்கு இது 2-வது தங்கப்பதக்கம் ஆகும். ஏற்கனவே 25 மீட்டர் பிஸ்டல் பிரிவிலும் அவர் மகுடம் சூடியிருந்தார்.

ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிரிவிலும் இந்தியாவுக்கு சோகமே மிஞ்சியது. இதில் இந்திய வீரர் அனிஷ் பான்வாலா தகுதி சுற்றை தாண்டவில்லை.

இதே போல் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் காயத்ரி, சுனிதி சவுகான் ஆகிய இந்தியர்கள் தகுதி சுற்றுடன் நடையை கட்டினர்.

இது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தாலும் ரசிகர்களின் நம்பிக்கை குறைந்துவிடவில்லை என்பதே சற்று ஆறுதலாக உள்ளது.