World Cup Cricket
World Cup Cricket

World Cup Cricket – 12-வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி, மே 12 ஆம் தேதி நிறைவடைகிறது.

அதனை தொடர்ந்து மே 30-ந்தேதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது.

உலகக்கோப்பை இந்திய அணிக்கு முக்கியமான தொடர் ஆகும். இந்த தொடர் ஐபிஎல் போட்டி முடிந்த உடன் வருவதால் வீரர்களின் பணிச்சுமை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார்.

மேலும் இதை பற்றி ஐபிஎல் உரிமையாளர்களிடம் பேசினோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உலக கோப்பை மற்றும் ஐ. பி. எல் ஆகிய இரு தொடர்களுக்கும் இடையில் சுமார் மூன்று வார இடைவெளி இருப்பதால் பணிச்சுமைக்கு வாய்ப்பில்லை.

மேலும், இதுகுறித்து எங்களுக்கு எந்தவித வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்படவில்லை என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணியில் குல்தீப் யாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் விளையாடுகிறார்கள். யாத வ் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் கூறுகையில் ‘‘பிசிசிஐ-யிடம் இருந்து இதுபோன்ற எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. ஐபிஎல் தொடர் போதுமான காலத்திற்கு முன்னதாகவே முடிவடைகிறது.

மே 12-ந்தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்கிறது. உலகக்கோப்பையில் இந்தியா ஜூன் 5-ந்தேதிதான் விளையாடுகிறது.

இதனால் போதுமான இடைவெளி இருப்பதாக நினைக்கிறேன். ஆனால் நாங்கள் எந்தவொரு வழிகாட்டி நெறிமுறைகளையும் பெறவில்லை” என்றார்.