Womens World T20 – மகளிர் டி-20 உலகக் கோப்பை அரையிறுதி நாளை நடக்க இருக்கிறது.
அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடந்தது.
அந்த தோல்விக்கு நாளை நடைபெறும் ஆட்டத்தில் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.
நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
இதில் இரு போட்டிகளில் இரு அணிகள் மோதிக் கொள்கின்றனர். வெற்றி பெரும் இரு அணிகள் இறுதி போட்டியில் மோதிக்கொள்கின்றனர்.
மே.தீ., அணி, ஆஸ்., அணி இரண்டு அணிகளும் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மோத உள்ளது.
மேலும் நாளை நடைபெறும் இரண்டாம் போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றனர்.
இத்தொடரில் நடைபெற்ற போட்டிகளில் இது வரை இந்திய அணி வெற்றி பெற்று குரூப்-பி பிரிவில் முதல் இடதில் உள்ளது.
அதே நேரத்தில் இங்கிலாந்து அணியும் பலம் வாந்த அணியே. இது குரூப்-ஏ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும் இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டியின் நடப்பு சாம்பியன் ஆகும். மற்றும் 2017 டி-20 போட்டியில் வெறும் 9 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிட தக்கது.
எனவே இந்த அரையிறுதியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். நாளை இந்திய நேர படி அதிகாலை 5.30 மணிக்கு போட்டி தொடங்க இருக்கிறது.