Women World Cup T20 – இந்தியா தோல்வி மகளிர் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அரை இறுதி முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நுழைந்தது.
அடுத்ததாக நடந்த அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின, இதில் இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
முதலில் நடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மே.தீ, அணியை ஆஸ், அணி வெற்றி பெற்றது. ஆஸ், அணி 20 ஓவர்க்கு 142 ரன்கள் எடுத்து இருந்தது. 71 ரன் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேலும் மூன்று முறை சாம்பியனான ஆஸ், அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பது இது 5-வது முறை.
அடுத்ததாக விளையாடியது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஆகும். இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணியை வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
வரும் 25-ஆம் தேதி இந்திய நேர படி அதிகாலை 5.30-க்கு இறுதிப் போட்டி தொடங்க இருக்கின்றது. இதில் இங்கிலாந்து அணி மற்றும் ஆஸ், அணிகள் மோதுகின்றனர்.