Woman sucide
கணவர் வீட்டார் செய்த கொடுமை காரணமாக பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman kills two sons and hanged herself – மகாராஷ்டிரா மாநிலம் தனே பகுதியில் வசித்து வந்தவர் சீதா ராஜு வாவியா. இந்த தம்பதிக்கு லக்ஸ்(4), ருத்ரா (5) என இரு மகன்கள் உள்ளனர். சீதாவுக்கும், அவரின் கணவர் ராஜுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. மேலும், ராஜு மற்றும் அவரின் பெற்றோர்கள் சீதாவிடம் வரதட்சனை கொடுமை செய்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த சீதா குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோட்பந்தர் சாலையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

விஷாலுடனான திருமணம் நின்று விட்டதா? அனிஷா விளக்கம்.!

இந்நிலையில், கடந்த ஞாயிறு மாலை அவர் தனது மகன்கள் இருவரையும் தூக்கு மாட்டி கொலை செய்துவிட்டு, படுக்கை அறையில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், தங்களின் மரணத்திற்கு தனது கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரே காரணம் என கடிதம் எழுதி வைத்துள்ளார்.

எனவே, போலீசார் இது தொடர்பாக ராஜு மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.