WHO warning About Corona : கொரோனா தடுப்பு மருந்தை பெறுவதில் உலக நாடுகள் சுயநலமும் காட்டினால், தொற்றை வீழ்த்த முடியாது எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஸ்விட்சர்லாந்து ஜெனிவா நகரில் அமைந்துள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தின் காணொலிக் காட்சி மூலம் அதன் தலைவர் டெட்ரோஸ் கூறியதாவது:
கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தை காட்டுவது மிகவும் தவறானதாகும். அத்தகைய சுயநலத்தால் யாருக்கும் நன்மை கிடைக்காது. நோய்த்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டுமென்றால் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
நடிகர் விஜய் ஒரு ரவுடி.. பணம் கொடுத்து எனக்கு எதிரா பேச வைக்கிறார் – நடிகை வெளியிட்ட சர்ச்சை வீடியோ
காரணம் இது உலகமய காலகட்டம். தற்போதெல்லாம் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பின்தங்கி கொண்டேதான் செல்கிறது.
இத்தகைய சூழலில் உலகில் மற்ற நாடுகளில் தோற்றம் கொண்டிருந்தாலும் தங்கள் நாட்டிற்கு மட்டும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற்றுவிடலாம் என்று நினைப்பது மிகவும் முட்டாள்தனமான எண்ணமாகும்.
ஆகஸ்ட் 8ம் தேதி வரை உள்ள நிலவரத்தின் படி. உலகமுழுவதும் 1,95,89,955 பேருக்கு கொரநாத் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 7,25,086 பேர் அந்த நோயினால் பலியாகி உள்ளனர். இதனை உணர்ந்து உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.