என்னுடைய அடுத்த படம் சிம்புவுடன் தான் என பிரபல இயக்குனர் அதிரடியாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் VZ துரை. இவரது இயக்கத்தில் இருட்டு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை அடுத்து அமீரை வைத்து நாற்காலி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அதன் பிறகு தான் மீண்டும் சிம்புவுடன் இணைய இருப்பதாக கூறியுள்ளார். மேலும் நீங்கள் மீண்டும் இணையும் படம் தொட்டி ஜெயா-2 ஆ? என கேட்டதற்கு இல்லை அது புதிய கதை என குறிப்பிட்டுள்ளார்.