ஓரின சேர்க்கையாளரால் ரக்ஷன் தனக்கு நடந்த சம்பவத்தை பற்றி பேசியுள்ளார்.
VJ Rakshan : தமிழ் சின்னத்திரையில் ராஜ் டிவி, கலைஞர் டிவி ஆகிய சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் பின்னர் விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷன்.
இவர் தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாக உள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் தற்போது தன்னுடைய அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒரு முறை நான் ஷார்ட்ஸ் போட்டு கொண்டு நடந்து சென்ற போது ஒரு ஆண் என்னை பார்த்து சிரித்தார். நான் தொடர்ந்து என்னுடைய வேலையை கவனித்தேன்.
அந்த நபர் என்னை பின் தொடர தொடங்கியதும் எனக்குள் ஒரு பயம் வந்தது. அதன் பின்னர் நான் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை என கூறினேன்.
ஒரு ஆணுக்கே இப்படியென்றால் பெண்கள் இது போன்ற சமயங்களில் எப்படி பயப்படுவார்கள் என்பதை நான் அந்த நொடியில் உணர்ந்தேன் என கூறியுள்ளார்.