Vj Rakshan About Chithra Suicide

சித்ரா தற்கொலை விவகாரத்தில் சிக்கிய ரக்சன் வெளியான தகவல் குறித்து விளக்கமளித்துள்ளார்.

Vj Rakshan About Chithra Suicide : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சித்ரா.

இவருக்கு ஹேம்நாத் என்பவருடன் இரு மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் முடிந்தது. மேலும் இவர்கள் இருவரும் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் எழத் தொடங்கியுள்ளது. சித்ரா சீரியலில் நடிக்க கூடாது என அவருடைய கணவர் சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து போலீசார் சித்ராவின் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சித்ராவின் தற்கொலையில் விஜய் டிவி தொகுப்பாளரான ரக்ஷனுக்கு தொடர்புள்ளது. அவர் சித்ராவை காதலித்த போது டேட்டிங் சென்ற வீடியோவை எடுத்து வைத்து மிரட்டியதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ரக்சன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அதுவும் காதல் திருமணம். நான் பொதுவா யாரிடமும் சத்தம் போட்டு பேச மாட்டேன்.

சித்ராவை எனக்கு பெரியதாக தெரியாது. விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சந்திக்கும் போது தான் தெரியும். பார்த்துக் கொண்டால் பேசிக்கொள்வோம் அவ்வளவுதான்.

ஆனால் யூடியூப் சேனல் ஒன்றில் எனக்கும் சித்ராவுக்கும் காதல், டேட்டிங் என கண்டபடி வீடியோ வெளியிட அதை செய்தியாக பலரும் வெளியிட்டுள்ளார்கள். இதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க என் நண்பர்களிடம் ஆலோசனை செய்து வருகிறேன்.

இதுபோன்ற தேவையில்லாத பிரச்சனையை என் பெயரை கெடுக்கும் வகையில் வெளியான தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நானும் கஷ்டப்பட்டு பல தடைகளைத் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

தற்போது வரை வாடகை வீட்டில் வசிக்கிறேன். நான் ஒன்றும் பெரியதாக சம்பாதித்து விடவில்லை. இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி என் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள் என கூறியுள்ளார்.