சென்னையில் மீண்டும் லாக் டவுன் அறிவித்திருப்பது மணிமேகலையை புலம்ப வைத்துள்ளது.
VJ Manimegalai About Lockdown : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினி ஆக வலம் வருபவர் மணிமேகலை. சன் மியூசிக் சேனல் மூலமாக அறிமுகமாகி இன்று விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலே கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது கிராமத்தில் சிக்கிக் கொண்டு அங்கிருந்து வித விதமான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.
அதன் பின்னர் சென்னை வந்தடைந்த மணிமேகலை கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பிளாக்பஸ்டர் இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன் – புதிய படம் பற்றி வெளியான மாஸ் அப்டேட்!
தற்போது மீண்டும் சென்னையில் ஒரு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தனக்கு தேவையான காய்கறிகள் மளிகை பொருட்களை வீட்டுக்கு வாங்கி வந்துள்ளார்.
கடைசி நேரத்துல மளிகை பொருட்களை வாங்கியாச்சு. ஆனா சமைக்கிறது யாருன்னு தெரியல. ஜும் ஆப் மூலமாத்தான் சமையல்காரர் அக்கா கிட்ட கேட்டு சமைக்கணும்.
முடிஞ்சவரைக்கும் குக்கர் வெடிக்காமல் சமைச்சு வீடியோ போடுறேன் என பதிவிட்டுள்ளார். மேலும் இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா சென்னைக்கு வந்திருக்க மாட்டேன் அந்த கிராமத்திலேயே இருந்து இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
மணிமேகலையின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நாளைக்கு எல்லா யூடியூப் பக்கத்திலேயே நடுவீட்டில் மணிமேகலை செய்கிற வேலையை பாருங்க வீடியோ ஒரு என கிண்டலடித்து வருகின்றனர்.