பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகனாக நடிக்க உள்ளார் தொகுப்பாளர் தீபக்.
VJ Deepak in New Serial : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் சீரியல் நடிகராகவும் வலம் வருபவர் தீபக். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நாயகனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
இதனையடுத்து அவர் வேறு எந்த செயலிலும் ஹீரோவாக நடிக்கவில்லை. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தீபக் மீண்டும் சீரியலில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இவர் நடிக்க உள்ள புதிய சீரியலுக்கு தமிழும் சரஸ்வதியும் என பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.