தன் பெயரில் நடந்த ஏமாற்று வேலையால் பாண்டியன் ஸ்டோர் சித்ரா ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
VJ Chitra Request to Fans : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக சீரியல் நடிகையாக வலம் வருபவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.
இந்த சீரியலுக்கு பிறகு சித்ராவை பின் தொடரும் ரசிகர்கள் பல மடங்காக உயர்ந்துள்ளனர்.
மேலும் தன்னுடைய ரசிகர்களுக்காக சித்ரா சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து தினம் தினம் அவர்களுடன் பேசுவது படங்களை வெளியிடுவது என இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் பெயரில் போலி கணக்கு ஒன்று உருவாகி ரசிகர்களை ஏமாற்ற தொடங்கியுள்ளது.
இதனையறிந்த சித்ரா அந்த போலி கணக்கின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த கணக்கின் மீது புகார் அளித்து அதனை ஒழித்து கட்டுமாறு ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியன் ஆனதை அடுத்து அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.