Viyatnam Registered 1st Corona Death : வியட்நாமில் கொரோனாக்கு முதல் முதலாக ஒருவர் பலியாகியுள்ளார். அந்நாட்டில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 70 வயது நபர் அந்த நோய் தாக்கத்தால் உயிரிழந்தார்.
மருத்துவமனையில் சிறுநீரக கோளாறுக்கு சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு அந்த நோய் தொற்று ஏற்பட்டது. இந்நாட்டில் கொரோனாக்கு ஒருவர் பலியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
சூர்யாவை திருமணம் செய்து கொள்ள இது தான் காரணம் – ஜோதிகா ஓபன் டாக்!
வியட்நாமின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நல்ல பலன் அளித்து தொடர்ந்து 99 நாட்களாக யாருக்கும் புதிதாக அந்த நோய் தொற்று கண்டறியப்படாமல் இருந்தது. எனினும் அண்மைக்காலமாக நாட்டில் அந்த நோய்த்தொற்றின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுவரை, வியட்நாமில் 546 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 373 பேர் அந்த நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.