கரோனா வைரஸ் காரணத்தினால் தன்னுடைய மூன்று படங்களின் முழு சம்பளத்தையும் விஷ்ணு விஷால் விட்டுக்கொடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vishnu Vishal Decision : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலரும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதற்காக திரையுலக பிரபலங்கள் பலரும் உதவி வந்த நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்து வரும் மூன்று படத்திற்கான சம்பளத்தில் 25 சதவிகிதத் தொகையைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார். இதற்கு தயாரிப்பாளர் டி சிவா பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் தான் நடித்து வரும் மூன்று படங்களின் முழு சம்பளத்தையும் தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் நபர்களுக்கு கொடுத்து உதவியுள்ளார்.
விஷ்ணு விஷால் செய்த இந்த பெரிய உதவியை அவர்கள் மனமார வாழ்த்தி நன்றி கூறி வருகின்றனர்.