
National Wheel Chair Fencing Championship போட்டியில் பங்கேற்கும் தமிழ் பெண்ணுக்கு விஷால் தேவையான உதவிகளை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகர், தயாரிப்பாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்று இல்லாமல் மக்களுக்காக தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.
சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பில் தீ விபத்தில் சிக்கிய நபருக்கு தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாக 50,000 பணம் கொடுத்து உதவி செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு உதவியை செய்துள்ளார். அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சகோதரி எழிலரசி என்பவர் ஹரியானா மாநிலத்தில் நடைபெற இருக்கும் National Wheel Chair Fencing championship 2022-2023 தமிழ் நாட்டிலிருந்து அங்கு பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் அந்த போட்டியில் பங்கேற்க அவருக்கு தேவையான அடிப்படை உதவிகளை நடிகர் விஷால் தனது தேவி அறக்கட்டளை சார்பில் மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் வழங்கியுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.