தொடர்ந்து சினிமாவை டார்கெட் செய்வது ஏன் என இந்திய அரசின் புதிய விதிக்கு எதிராக கொந்தளித்துள்ளார் நடிகர் விஷால்.
Vishal Against on CinemagraphAct : இந்திய திரையுலகில் வெளியாகும் படங்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இந்திய அரசின் ஒளிப்பதிவு விதி என்ற பெயரில் புதிய சட்டத்தை கொண்டுவர உள்ளது. இதன் மூலம் ஒரு படம் சென்சார் செய்யப்பட்டு இருந்தாலும் அரசு தலையிட்டு சில காட்சிகளை முழுக்கவும் அந்த படத்தை முற்றிலுமாக தடை செய்யவும் முடியும்.
இந்த புதிய விதிக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நேற்று சூரியா தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார்.
நடிகர் சூர்யாவை தொடர்ந்து தற்போது நடிகர் விஷால் இந்த விதிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். மனித சுதந்திரம் எங்கே? சென்சார் போர்டு எதற்கு? எப்போதும் சினிமாவை டார்கெட் செய்வது ஏன்? முதலில் ஜிஎஸ்டி தமிழ் ராக்கர்ஸ் எதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. இப்போது ஒளிப்பதிவு விதி. இதெல்லாம் சரி இல்லை என நடிகர் விஷால் எச்சரித்துள்ளார்.