திருமணம் நின்று போனது ஏன் என முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் விஷால்.
Vishal About His Marriage Issue : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சக்ரா திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது.
இவருக்கு கடந்த வருடம் தெலுங்கு நடிகையான அனிஷாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவித சத்தமும் இல்லாமல் இருவரும் பிரிந்து விட்டனர்.இவர்கள் தெரிவித்ததையடுத்து அனுஷாவிற்கு சில தினங்களுக்கு முன்னர் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் முடிந்தது.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய திருமணம் நின்று போனதற்கான காரணம் என்ன என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
என்னுடைய திருமண விஷயத்தில் சில விஷயங்கள் கை மீறிச் சென்று விட்டன. தற்போதைக்கு நான் சிங்கிள் தான் மிங்கிளாக ரெடி என தெரிவித்துள்ளார்.