Virat Kohli : டி-20 போட்டிகளில் தோனியின் நீக்கம் பற்றி பலவாறு பேச்சுகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
அதற்கான விளக்கத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது விளக்கம் அளித்து உள்ளார்.
மே.தீ., மற்றும் ஆஸ்., உடனான டி-20 போட்டிகளில் இந்திய அணியில் தோனியின் பெயர் சேர்க்கப்படவில்லை.
தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் மட்டும் தான் விளையாடி கொண்டிருக்கிறார். இதனை மூத்த வீரருக்கு ஓய்வு என்றும் குறிப்பிட முடியாது.
இதனை அடுத்து, தோனியின் நீக்கம் பற்றி தேர்வு குழு மற்றும் விராட் விளக்கம் அளித்துள்ளனர்.
அது என்னவென்றால், எதிர்காலதில் நல்ல விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு தேவைப்பட இருப்பதால் இப்பொழுதே நல்ல பயிற்சி அளிக்கப்பட வேண்டி இருக்கின்றது.
எனவே மாற்று விக்கெட் கீப்பர் தேர்தேடுக்கவே தோனிக்கு ஓய்வு அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது தேர்வு குழு.
மேலும் இதனை பற்றி பாதிரிக்கைகளுக்கு விளக்கம் கூறிய கோலி :
தேர்வு குழு தோனியின் நீக்கம் குறித்து முன்னதாகவே விளக்கம் அளித்துள்ள நிலையில் நானும் விளக்க வேண்டியது இல்லை என்றும், இந்த ஆலோசனை நடக்கும் போது நான் அங்கு இல்லை என்றும் விராட் கூறினார்.
மேலும் தோனி, தற்போது இந்திய அணியின் ஒரு அங்கமே. அவர் டி-20 போட்டிகளில் ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க நிலைகிறார்.
இதனை அடுத்து அவர், ஒருநாள் போட்டிகளில் வழக்கம் போல் விளையாடுவார். இளம் வீரர்களுக்கு உதவவே அவர் முயற்சிக்கின்றார். என்று கூறினார் கோலி.