Virat Kohli Speech :
தொடக்க 45 நிமிட மணி நேர மோசமான ஆட்டம் தோல்வியை தந்து விட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தோல்விக்கு பின்னர் அளித்த பேட்டியில் விராட் கோலி கூறியதாவது-
உலகக்கோப்பை தொடர் முழுக்க சிறப்பாக விளையாடினோம். ஆனால் முக்கால் மணி நேர மோசமான ஆட்டம் எங்களுக்கு தோல்வியை தந்து விட்டதை மிக மோசமாக சம்பவமாக பார்க்கிறோம்.
பந்தை இன்னும் சிறப்பாக எதிர்கொண்டிருக்க வேண்டும். மற்றபடி நிச்சயமாக நாங்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். தொடரின் அனைத்து ஆட்டங்களும் நாங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளும் வகையில்தான் ஆடியிருக்கிறோம்.
மீண்டும் சூடு பிடிக்கும் சுச்சி லீக், லீக்கான நயன்தாரா, த்ரிஷாவின் புகைப்படம்.!
நியூசிலாந்து நல்ல நெருக்கடியை கொடுத்தது. எங்களை விட தைரியமாக செயல்பட்டார்கள். வெற்றிக்கு நியூசிலாந்து தகுதியான அணி. எங்களை உற்சாகப்படுத்த அதிக எண்ணிக்கையில் திரண்ட ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நியூசிலாந்து பவுலர்கள் பாராட்டுக்கு தகுதியானர்கள். புதிய பந்தை அவர்கள் சரியாக பயன்படுத்திய சரியான இடத்தில் பந்தை வீசினார்கள். ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடினார். இன்றைக்கு அவரது ஆட்டம் அணிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்தது. இவ்வாறு கோலி கூறினார்.
இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொள்கிறது. அங்கு டி20, 50 ஓவர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்தியா விளையாடுகிறது.