Virat Kohli Speech
Virat Kohli Speech

Virat Kohli Speech – கிரிக்கெட் உலகில் இன்றைய நிலவரப்படி நம்பர் 1 கிரிக்கெட் வீரராக விளங்குபவர் விராட் கோலி. அவர் தனது கிரிக்கெட் வாழ்வின் ஓய்வு பற்றி தெரிவித்து உள்ளார்.

விராட் கோலி தான் பங்குபெரும் எல்லா போட்டிகளிலும், எல்லா ரன்களிலும் ஏதேனும் ஒரு சாதனையை முறியடித்து வருகிறார்.

மற்றும் இன்றைய கால கட்டத்தில் விராட் கோலி ஒரு தலை சிறந்த விளையாட்டு வீரர் என்பதில் சந்தேகம் இல்லை.

சமீபத்தில் அவரில் தலைமையில் இந்தியா ஆஸ்.,சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியதில் வரலாற்று சாதனை படைக்கும் விதமாக வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து நியூ., உடன் விளையாட உள்ளது இந்திய அணி.

விராட் கோலி கூறியது : “இன்னும் 8 ஆண்டுகளுக்கு பிறகு எனது மனைவி அனுஷ்கா மற்றும் எனது குடும்பத்தினற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.

அப்போது கிரிக்கெட் என் வாழ்வில் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும்.

ஆனால், எந்த நேரத்திலும் எனக்கு குடும்பமே முக்கியமானது. கிரிக்கெட்டை நேசிக்காமல் இருந்தால் சரியாக விளையாட முடியாது என்பதை நான் நம்பவில்லை.

ஏன் என்றால் என்ன நடந்தாலும் இறுதியில் நாம் வீட்டிற்குதான் சென்றாக வேண்டும். வாழ்க்கையை விட வேறு எதுவும் பெரியது இல்லை.” என்று கூறினார்.

தற்போது 30 வயது கொண்ட விராட் இன்னும் 8 ஆண்டுகள் மட்டுமே விளையாடினாலும் அவர் பலரில் சாதனையை முறியடிக்கவும், புதிய சாதனைகள் படைக்கவும் முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.