Vinayagar Chaturthi Celebration in EPS : இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
அதேசமயம் மக்கள் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது.
அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் மனைவி ராதா மற்றும் மகன் மிதுன் ஆகியோருடன் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து வழிபாடு செய்துள்ளார்.
மேலும் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் தோப்புக்கரணமிட்டு விநாயகரை வணங்கியுள்ளார். தமிழக மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.