கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாக போகும் அடுத்த மூன்று படங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் அடுத்ததாக கோப்ரா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து விக்ரம் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

அது ஒரு கோப்ரா படத்தை இயக்கிய ஞானமுத்து இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து லூசியா மற்றும் நியூட்டன் படத்தை இயக்கிய பவன் குமார் இயக்கத்தில் உருவாக்க உள்ள படத்தின் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படங்களில் நடித்த கையோடு அவர் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவார் என சொல்லப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் உருவாக உள்ள இந்த மூன்று படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை எங்களோடு கமெண்டில் சொல்லுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.