Vijay‘s Makkal Iyakkam Financial Relief Found To Jaya Priya Family
இந்தியாவில் கொரானா வைரஸ் பரவல் ஒருபுறம் வாட்டி வதைக்க இன்னொரு புறம் சோகங்கள் நம்மை துடிக்க வைத்து வருகின்றன.
ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்ததற்காக சாத்தான் குளத்தில் அப்பா-மகன் என இருவரும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சோகம் முடிவதற்குள் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயப்பிரியா என்ற 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பரமக்குடி அதிமுக எம்எல்ஏ வுக்கு கொரானா உறுதி, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – வெளியான பரபரப்பு தகவல்கள்பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் இணைந்து ஜெயப்பிரியாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளனர்.
மேலும் அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் ஐம்பதாயிரம் நிதியும் அளித்துள்ளனர்.விஜய் ரசிகர்களின் இந்த செயல் மற்ற ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.