VijayaKanth : கஜா புயலுக்காக நடிகர்களிலேயே அதிகமான நிதி கொடுத்திருப்பது விஜயகாந்த் என தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளை மோசமாக பாதித்துள்ளது.
பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதில் இருந்தும் மக்கள் டெல்டா பகுதிகளுக்கு உதவி வருகின்றனர்.
இவர்கள் மட்டுமில்லாமல் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
சூர்யா, விஜய், விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன் மற்றும் பலர் உதவி செய்து வருகின்றனர். அதே போல் லைகா நிறுவனம் ஒரு கோடிக்கும் அதிகமாக நிதி அளித்துள்ளது.
இவர்களை தொடர்ந்து தற்போது கேப்டன் விஜயகாந்த் அவர்களும் மக்களுக்கு உதவி செய்ய உள்ளார். இதற்காக ரூ 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை டெல்டா மக்களுக்கு அனுப்புவதற்கான வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுளளன.