Vijayakanth About Elephant Murder
Vijayakanth About Elephant Murder

இதை செய்தால் மட்டுமே மனிதகுலம் காக்கப்படும் என கேரளாவில் யானையைக் கொன்றது குறித்து விஜயகாந்த் கருத்து கூறியுள்ளார்.

Vijayakanth About Elephant Murder : கொரானாவின் கோரத்தாண்டவம் இந்தியாவில் தலைவிரித்தாடி வரும் நிலையில் கேரளாவில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து கொன்ற சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெறித்தனமான வசூல் வேட்டைக்கு தயாராகும் யாஷ்.. வெளியானது கே ஜி எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி!

இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். யானையை கொடூரமாகக் கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

யானையை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார்.

நானும் வெறித்தனமான வெயிட்டிங் மாஸ்டர் டிரைலர் குறித்து பேசிய பிரபல நடிகர் – யார்?? என்ன சொல்லி இருக்கார் பாருங்க!

கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற மர்ம நபர்களுக்கு மிகப் பெரிய தண்டனையை வழங்க வேண்டும்.

விலங்குகள் காக்கும் போது தான் மனித குலமும் காக்கப்படும். மேலும் வாய் இல்லாத ஜீவன்களிடம் நாம் அனைவரும் அன்பு காட்ட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.