Vijay TV : விஜய் டிவியில் ஏற்பட்ட பிரச்சனையால் விஜய் டிவியில் இருந்து விலகி விடுவேன் என பிரபலம் ஒருவர் தொலைக்காட்சி சேனலை எச்சரித்துள்ளார்.
சின்னத்திரையில் புதுப்புது நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் முன்னிலை வகித்து வருகிறது விஜய் டிவி.
இந்த சேனலில் தற்போது ஜோடி Fun Unlimited என்ற பெயரில் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் நடுவர்களாக மஹத், மாகப, டிடி, யாஷிகா ஆனந்த ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கென ஜோடி ஜோடியாக போட்டியாளர்கள் பிரித்துள்ளனர்.
சமீபத்தில் மஹத்தின் டீமை சேர்ந்த சித்ரா, குமரன் ஆகியோர் காதல் சுற்றியில் சூப்பராக நடனமாடியுள்ளனர். ஆனால் இவர்களுக்கு நடுவர்கள் குறைந்த மதிப்பெண்ணையே வழங்கியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த மஹத் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். திறமையை வைத்து மதிப்பெண் குடுங்க, ஆளுங்களை பார்த்து மதிப்பெண் கொடுக்காதீங்க என வாதம் செய்துள்ளார்.
அதன் பின்னர் இனியும் இது போன்ற பிரச்சனை நடைபெறாமல் பார்த்து கொள்கிறோம் என கூறியுள்ளார். மேலும் மஹத் இன்னொரு முறை இப்படி நடந்தால் நான் இந்த நிகழ்ச்சியை விட்டே விலகி விடுவேனா எனவும் எச்சரித்துள்ளார் மஹத்.