விஜய் பேசிய பேச்சு பட்டிமன்ற பேச்சாளர் ஒருவர் பேசியதின் காப்பி என நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில் அதற்கு விளக்கமளித்துள்ளார் அந்த பட்டிமன்ற பேச்சாளர்.
Vijay Speech Controversy : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தீபாவளிக்கு பிகில் திரைப்படம் ரிலீசாக உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. இதில் விஜய் ஒரு குட்டி கதை சொன்னார்.
விஜய் படத்தில் இருந்து பாதியில் விலகிய அஜித்.. வெளிவராத ரகசியங்கள் – புகைப்படங்களுடன் இதோ
இதே குட்டி கதையை பட்டிமன்ற பேச்சாளர் ஒருவரும் கூறி இருந்தார். இதனால் விஜய் அவரை காப்பி அடித்து விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது அந்த பட்டிமன்ற பேச்சாளர் இது குறித்து பேசியுள்ளார். விஜய் முதலில் கூறியது திருக்குறள்.
அதன் பின்னர் கூறியது ஒரு சிறு கதை. இந்த கதையை நானும் கூறியுள்ளேன். என்னுடைய முன்னோர்கள், பல கவிஞர்களும் எனக்கு முன்பாக பல இடங்களில் கூறியுள்ளனர்.
விஜய் இந்த கதையை எங்கேயாவது கேட்டிருக்கலாம், அதனை அவர் என்னுடைய கதை என ஒரு போதும் சொல்லவே இல்லை. நான் விஜயின் தீவிர ரசிகை. தற்போது அவருடைய பேச்சுக்கும் ரசிகையாகி விட்டேன் என கூறியுள்ளார்.