நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகியிருந்த விஜய் சேதுபதி தற்போது விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

“குக்கூ” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ராஜு முருகன். இவர் ஜோக்கர்,ஜிப்ஸி போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார். இந்நிலையில் இவர் நடிகர் கார்த்தியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது கால்ஷீட் இல்லாத காரணத்தால் இந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்திற்கான வில்லன் கதாபாத்திரத்தின் நடிகருக்கான தேடல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.