Vijay Sethupathi in CCV Shooting Spot
Vijay Sethupathi in CCV Shooting Spot

விஜய் சேதுபதி மணிரத்னத்தை மதிக்கவில்லை என தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Vijay Sethupathi in CCV Shooting Spot : தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து மக்கள் செல்வனாக இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி.

விக்ரம் வேதா படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி அடுத்த பேட்ட படத்திலும் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

கோவில் சர்ச்சையில் சிக்கியவர் இல்ல விஜய் சேதுபதி தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வேட்டி விளம்பரத்தால் அஜித்துக்கு கிடைத்த வெற்றிப் பட வாய்ப்பு – அதற்கும் இந்த நடிகர் தான் காரணம்

அதாவது இவர் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தை நடித்து இருந்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பொதுவாகவே மணிரத்னம் தனக்கு நடிகர்களிடமிருந்து என்ன வேண்டுமோ அதனை நடித்துக் காட்டி தான் வாங்குவார். செக்கச்சிவந்த வானம் சூட்டிங் ஸ்பாட்டில் அதேதான் நடந்துள்ளது.

ஆனால் விஜய் சேதுபதி எனக்கு நடித்துக் காட்ட வேண்டாம் நான் என்னுடைய சொந்த பாணியில் நடித்து விடுகிறேன் என முகத்தில் அடித்தாற்போல கூறி விட்டதாக சினிமா விமர்சகர்கள் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் சேதுபதி இவ்வாறு கூறியது மணிரத்னத்திற்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியதாக அங்கே பணியாற்றிய ஒருவர் கூறியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.