தன்னுடைய இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார் சேரன்.
Vijay Sethupathi Cheran Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக வலம் வருபவர் சேரன். இவர் இயக்கிய பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றுவரை பேசக்கூடிய படங்களாக இருந்து வருகின்றன.
சமீபத்தில் தொலைக்காட்சியில் தவமாய் தவமிருந்து திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இதனை பார்த்த ரசிகர்கள் படத்தை குறித்து சேரனிடம் டுவிட்டரில் கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.
அப்போது விஜய் சேதுபதி நடிக்க உள்ள படம் தவமாய் தவமிருந்து படத்தை போலத்தான் இருக்கும். அண்ணன்களும் தங்கைகளும் கண்ணில் வைத்து பாதுகாக்கும் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.
ஆனால் சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய் கொண்டே வருகிறது. காலம் வழி விடுமோ என குறிப்பிட்டுள்ளார்.
தவமாய் தவமிருந்து போன்ற ஒரு படைப்பாகத்தான் விஜய்சேதுபதி அவர்களோடு இணையும் படத்துக்காக முடித்து வைத்திருக்கும் திரைக்கதை. ஏனோ செய்து முடிக்க முடியாமல் தள்ளிக்கொண்டே போகிறது.. அண்ணன்களும் தங்கைகளும் கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கப்போகும் படம். வழி விடுமா காலம்.. https://t.co/ydPiaC3lt1
— Cheran (@directorcheran) April 4, 2020