விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் வில்லன்களாக நடிக்க நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.
சூர்யா சில நிமிட காட்சிகள் மட்டுமே இந்த படத்தில் தோன்றினாலும் அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பேட்டி ஒன்றில் தனது ஸ்டார் இணையத்தை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகர் சூர்யா ரசிகர்களுக்காக ஒரு படமாக நினைத்து விக்ரம் படத்தில் நடித்தது பெரிய விஷயம், ரொம்ப சந்தோஷம் என அவரை பாராட்டி உள்ளார்.
மேலும் இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் முதலில் வேறொருவர் தான் நடிக்க இருந்தார். ஒரு வாரம் முன்னால் தான் நடிகர் சூர்யா நடிப்பது தெரியவந்தது என குறிப்பிட்டுள்ளார்.