Vijay Movie : விஜய்க்காக கதை எழுதியே நான் அதிக லாபம் பார்த்துள்ளேன் என பிரபல இயக்குனரான சுந்தர் சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கி வருபவர் சுந்தர்.சி. இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயை பற்றியும் அவரை இயக்கமலே அவரால் கிடைத்த லாபத்தை பற்றியும் பேசியுள்ளார்.
சுந்தர் சி கூறியதாவது நான் விஜயை இயக்காமலேயே அதிக லாபத்தை பார்த்துள்ளேன். ஆம், இதுவரை விஜய்க்காக 7 கதைகளை எழுதியுள்ளார்.
அவரால் நடிக்க முடியாமல் போகவே வேறு நடிகர்களை வைத்து இயக்கி அந்த படங்களின் மூலம் நல்ல லாபத்தை பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.
அவரை ஹீரோவாக நடிக்க வைத்த தயாரிப்பாளர்கள் கூட நான் பெற்ற லாபத்தின் அளவிற்கு பெற்றிருப்பார்களா என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் AGS நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 63 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.