ஒரே ஒரு நாள் வா.. உல்லாசமா இருக்கலாம் என பிரபல நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக விஜய் பட நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் மீ டு மீதான புகார் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சின்மயீ, ஸ்ரீ ரெட்டி ஆகியோர் மீ டூ-வில் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது விஜய் பட நடிகை இஷா கோபிகர்.
தமிழில் நெஞ்சினிலே, ஜோடி, நரசிம்மா ஆகிய படங்களில் நடித்த இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கொண்டார், இதனையடுத்து தற்போது தன்னுடைய அடுத்த இன்னிங்ஸை தொடங்க உள்ளார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பிரபல நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார், ஆனால் நான் அவரை கண்டபடி திட்டி அனுப்பி வைத்து விட்டதால் எனக்கு அதன் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காதபடி செய்து விட்டார் என கூறியுள்ளார்.
ஆனால் அந்த நடிகர் யார் என்பதை அவர் குறிப்பிடாததால் அது யாராக இருக்கும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.