அடுத்து வர 6 மணி நேரமும் பட்டாசா இருக்கும் என ஜெகதீஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படியான நிலையில் தளபதி விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடுத்து வரும் 6 மணி நேரமும் சும்மா பட்டாசா இருக்கும் என பதிவு செய்துள்ளார்.

இதனால் அடுத்த 6 மணி நேரத்துக்கு தொடர்ந்து படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.