ரத்தம் தேவியின் அவசர உதவிக்காக விஜயின் மக்கள் இயக்கத்தினர் செய்துள்ள விஷயத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

கோலிவுட் திரை வட்டாரத்தில் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடித்து வருகிறார். வரும் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நிறைய சமூக சேவையில் செய்து வருவது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் தற்போது இவர்கள் செய்துள்ள புதிய செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது நாமக்கல்லை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் அவசர காலத்தில் ரத்தம் தேவைக்காக உதவும் வகையில் ‘குருதி மென்பொருள் ஆப்’ ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். அதற்குப்பின் அந்த ஆப்பிள் ரத்த வகை, தொலைபேசி எண் போன்றவற்றை பதிவு செய்யுமாறு இளைஞர்களிடம் விழிப்புணர்வும் செய்து வருகின்றனர். இவர்கள் செய்துள்ள இந்த நல்ல விஷயத்தை வியப்புடன் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.