நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது விஜய் மக்கள் இயக்கம்.
Vijay Makkal Iyakkam Decision on Election : தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் முழுமையாக முடிவடைந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி கண்ட விஜய் மக்கள் இயக்கம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.
சமீபத்தில் தளபதி விஜய்யை புதுச்சேரி முதல்வர் நேரில் சந்தித்து வந்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து நேற்று விஜய் மக்கள் இயக்கம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. தனித்து நின்று போட்டியிடுகிறது என அறிவித்துள்ளனர். நம் இயக்க வேட்பாளர்கள் வெற்றிபெற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து ஓட்டு சேகரித்து அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் எந்த அளவிற்கு வெற்றி பெறப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அனைத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.