விஜய் ரசிகர்கள் செய்த செயலால் சென்னை ஈசிஆர் மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Vijay Fans Help in ECR : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
தற்போது பரவிவரும் கொரானா வைரஸால் மக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விஜய் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பல உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் ஈசிஆர் பகுதியில் உள்ள மூன்று திருமண மண்டபங்களில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.