Vijay Fans Decision on Sushant Death
Vijay Fans Decision on Sushant Death

பிரபல நடிகரின் மரணத்தால் விஜய் ரசிகர்கள் எடுத்த முடிவு பலரையும் வியக்க வைத்துள்ளது.

Vijay Fans Decision on Sushant Death : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் வரும் ஜூன் 22-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

ஆனால் தற்போது கொரானா வைரஸ் பரவி வரும் சூழ்நிலை காரணமாக தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம்.

தற்போது அவரவர் தங்களது உடல்நிலையையும் தங்களின் குடும்பத்தாரின் உடல்நிலையும் கவனித்துக் கொள்வதே சாலச்சிறந்தது என அறிவுரை கூறியிருந்தார்.

அதனையும் மீறி தளபதி ரசிகர்கள் விஜய் பிறந்தநாளுக்காக காமன் டிபி ஆகியவற்றை வெளியிட்டு கொண்டாட்டத்தை தொடங்கியிருந்தனர்.

விஜய் சொன்ன ஒரு வார்த்தை., விஜய் மக்கள் இயக்கம் எடுத்த அதிரடி முடிவு!

இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக விஜய் ரசிகர்கள் #THALAPATHYBdayFestCDP என்ற ஹாஸ்டேக் கொண்டாட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

அதேபோல் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பாலிவுட்காரர்கள் செயலே காரணமென கங்கனா ரனாவத் குற்றம் சாட்டியுள்ளார். இதனை தற்கொலை என சொல்லாதீர்கள் இது கொலை எனவும் அவர் கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமா சுஷாந்த் சிங்கை தள்ளி வைத்ததே அவரின் மன உளைச்சலுக்கு காரணம் என கூறப்படுகிறது.